| என் கற்பனை வளத்தை கொன்றவள் நீ |
என் கற்பனைகள் உன்னைத் தாண்டிச் செல்ல மறுக்கின்றன...
|
 |
| நீ என் முன் வரும் காலம் தான் - எனக்கு வருங்காலம். |
| நம் சந்திப்பு நிகழும் காலம் தான் - எனக்கு நிகழ்காலம். |
நீ காதலை மறுத்தால் மட்டுமே நிகழும் - எனக்கு இறந்த காலம்
|
 |
| நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பினாய்... |
| ஏனொ மருத்துவம் சம்பந்தமாக கேள்வி கேட்கிறேன் என்றாய். |
| "உன் உடல் symmetricஆ?" என்று கேட்டாய். |
| "ஆம்" என்றேன் சிந்திக்காமல். |
| "இல்லை.இதயம் இடது பக்கம்" என்றாய் - |
| என்னை வென்ற பெருமிதத்துடன்... |
| "என்னிடம் வலது பக்கமும் இருக்கிறது, உன் இதயம்" என்றேன். |
| வெட்கப்பட்டாய்... |
| "வெட்கம் கூட இப்படி வெட்கப்பட்டிருக்காது" என்றேன். |
| "காதல் கூட இப்படி காதலித்திருக்காது" என்றாய் - |
| இன்னும் வெட்கத்துடன். |
அலார மணியோசை நீ சொன்னதை உறுதிப்படுத்தியது
|
 |
| பார்வையில் அணுஅணுவாய் கதிர்வீச்சு பாய்தல் |
| விடைகள் கேட்டு விழி அம்பு எய்தல் |
| காகிதம் இன்றி (கேள்விக்)கணை தொடுத்தல் |
| உன் நினைவுச் சிறையில் என்னை அடைத்தல் |
| மோகம் பாய்தல் தேகம் சாய்தல் |
| உள்ளம் கடத்தல் உயிர் கொய்தல் |
| என் மனதில் தீவிர வாதம்...காதல் தீவிரவாதமா? |
 |
| அத்தி பூத்தது...உன்னை பார்த்தது |
| பார்த்த நாள் முதல் - தினமும் பூத்தது! |
No comments:
Post a Comment