Friday, August 15, 2008

நான் ரசித்த கவிதை !!!

நீ!

[ATcAAAD0v3y909EfswdHrDJFOg4-h3VocYbPx1rN4O9X19E-zaAXkOcKlvWX_mqRRDLN9oJCojoKy4ec4MUJaWp0J2YpAJtU9VCdTPepyroCct0KWC_18rO9B6PElQ.jpg]


உன்னை ரசிக்க வைத்த முதல் கவிதை!!!









பொய்யைக் கனவைக் கற்பனையைக்
கவிதையாய்க் கிறுக்கிடினும்
பிரமிப்புகள் நீங்கலாக
என்னவெல்லாமோ
எஞ்சியிருக்கின்றன இன்னும்
எழுதப்படாமலே இங்கு...!

வானவில்லின் வசீகரம்,
வண்ணத்துப்பூச்சி அழகு,
இதழ் விரிக்கும் பூக்களின் மென்மை,
காதலியின் பொய்க்கோபம்-எல்லாமே
எழுதப்பட்டிருப்பினும்...

எந்த மொழியில்,
எந்தச் சொற்களைக் கொண்டு,
எப்படி எழுதி முடிப்பேன்
என் தாயின் புன்னகையை
ஒரு சில வரிகளில்.....?

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


1 comment:

abiya bhuvi said...

Beautifully written.Enjoyed reading it. Made me think of my mom...